Saturday, June 18, 2011

தனிமனிதத்துவம்:

சீன வரலாற்றாசிரியர்கள் ஒருமுறை மா-சேதுங்கிடம் அவரின் சுயசரிதையை எழுத அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர் “ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு சுயவரலாறு உண்டா?” என்று கேட்டார். “சீனாவின் சமூக வரலாற்றை எழுதுங்கள் அதில் என் பெயர் வந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினாராம்.

தனிமனிதத்துவம்:

மனித சமூக வரலாற்றில் தனிமனிதனின் பங்கு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஆய்வு செய்ய புகுந்தால், தற்காலத்தில் ஒரு குண்டூசியைகூட தனி மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது, அதே போல், மனிதனையும் தனியொருவரால் உருவாக்க முடியாது. எந்த ஒரு தனி மனிதனும் இங்கே வானத்தில் இருந்து குதிக்கவில்லை, யாவருமே வரலாற்றின் தொடர்சி, ஒரு நீண்ட சங்கிலியில் ஒரு பினை மட்டுமே. இதில், தனி மனிதனை கொண்டாடுவது என்பது அபத்தம், இந்த அடிப்படையில் நாம் பிறந்தநாளையும் கொண்டாட கூடாது என்பதே உண்மை.

பொருளுக்கு பொருந்தும் இந்த உண்மை கருத்துக்கும் பொருந்தும், மார்க்சிய கருத்து என்பது கூட, வரலாற்றின் தொடர்சிதான், மார்க்ஸ் தத்துவத்துறையில் அதன் முன்னோடிகளான ஹெகலையும், ஃபாயர்பாக்கையும் படித்துதான் அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். அதே போல் பொருளாதாரத்தில் ஆடம் ஸ்மித்தையும், டேவிட் ரிக்கார்டையும் படித்துதான் அதை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். மார்க்சிற்கு பிறகு மார்க்சியத்தை லெனின் வளர்ததெடுக்கிறார். எனவே, இங்கு எல்லாமே ஒரு தொடர்சிதான், தனிமனிதனுக்கு மட்டுமே முழு பங்கு இல்லை. தனிமனிதரின், எண்ணங்கள், திறமைகள், செயல்கள், ஆற்றல்கள் யாவுமே கூட வரலாற்றின் தொடர்சிதான், இதில், இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று எதையும் சொல்வதற்கில்லை. “அடுத்தவன் சொத்தை அபகரிப்பது தப்பு” என்று முதலாளித்துவம் சொல்கிறது. “நீ சொத்து என்று ஒன்று வைத்திருப்பதே தப்பு” என்று கம்யூனிசம் சொல்கிறது.
ஒரு மனிதனுக்கு, தனக்கு மட்டுமே சொந்தமான (personal) எண்ணம் என்று எதுவும் இருக்கலாமா?, அப்படியே இருந்தாலும் அதை மற்றவர்க்கு சொல்லலாமா? சொல்லக்கூடாதா?. நியாயத்திற்கு வேண்டுமானால் இரண்டு பக்கம் இருக்கலாம், ஆனால், உண்மைக்கு ஒரு பக்கம்தானே இருக்க முடியும். ஒரு கொலைகாரனை தண்டிக்க சட்டத்திற்கு ஒரு நியாயம் இருக்கலாம், ஆனால், அவன் கொலை செய்ததற்கும் ஒரு நியாயம் இருக்கவே செய்யும். பத்துபேரின் மத்தியில் திருடியதை ஒப்புக்கொள்ள தயங்குகிறாயா, திருடாதே. “சமூகத்தின் மத்தியில் ஒப்புக்கொள்ள தயங்கும் எந்த ஒரு செயலையும் நாம் செய்யகூடாது” என்பதே பொதுவிதி. இதன் முடிவாக, திருட்டுத்தனம் என்பதற்கு இன்னொரு பெயர்தான் personal என்று ஆகிறது.

பத்திரிக்கை நிருபர்கள் ஒருமுறை எங்கெல்சிடம் “நீங்களும் மார்க்சும் பிறக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேட்டார்கள், அதற்கு அவர், “இந்த பொதுவுடைமை தத்துவத்தை வேறு யாராவது கண்டுபிடித்து சொல்லியிருப்பார்கள்” என்று சொன்னார். மேலும், “வரலாறு அதற்கு எங்களை பயன்படுத்தி கொண்டது” என்றும் சொன்னார். சமூகம் என்பதில் எத்தனை அக்கறை கொண்டிருந்தால் அவர் இந்த பதிலை கூறியிருக்க முடியும். வரலாற்றின் தவிர்க்க முடியாத நிகழ்வாகத்தான் அவர்கள் இதைப் பார்த்தார்களே ஒழிய தங்களின் தனிப்பட்ட சாதனையாக அவர்கள் கருதவில்லை.

இப்போது முதல் பத்தியை மீண்டும் படித்துபாருங்கள்.

No comments: