Monday, June 28, 2010

மார்க்சியம் என்றால் என்ன? பகுதி-1 (பொருள் முதல் வாதம்)

மார்க்சியம் என்பது மூன்று துறைகளை உள்ளடக்கியது,

1. மார்க்சிய மெய்யியல்
2. மார்க்சிய பொருளியல்
3. மார்க்சிய அரசியல்
ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. மார்க்சிய மெய்யியல்
இதில் வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் குறித்து பேசப்படுகிறது.

பொருள்:

பொருள் என்றால் என்ன?
பொருள் என்பது நமக்கு புறத்தே உள்ளது.

பொருளை எப்படி அறிவது?
ஐம்புலன்களின் வாயிலாக அறியப்படும் அனைத்தும் பொருள்கள்தான். கண்ணால், காதால், நாசியால், வாயினால் மற்றும் உடலால் உணரப்படுவது அனைத்தும் பொருள்கள். காற்று என்பதும் ஒரு பொருள்தான்.

கருத்து:

ஐம்புலன்களால் அறிய முடியாதவை என்று ஏதேனும் உண்டா?
ஆம். ஐம்புலன்களால் அறிய முடியாதவைகள் உண்டு. அவை அனைத்தும் கருத்து எனப்படும். நம் சிந்தனையில் உருவாகும் எதுவும் நாமாக வெளிப்படுத்தாத வரையில் மற்றவருக்கு தெரியாது. அவைகள்தான் கருத்து எனப்படும்.

பொருள் முதல் வாதம்:

பொருள்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது அறிவியல் விதி. பொருளை நீங்கள் தூள் தூளாக உடைக்கலாமே தவிர அவற்றை அழிக்க முடியாது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறிக் கொண்டிருக்கும்.
பொருளின் வடிவங்களுக்கு வயது உண்டே தவிர,
பொருளுக்கு வயது கிடையாது.

கருத்தின் வயது என்ன?

கருத்து என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தம். மற்ற உயிரினங்களுக்கு கருத்து இல்லை.
குருவி போல் மனிதன் என்றுமே கூடு கட்டமுடியாதுதான், ஆனால் குருவி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே வடிவிலான கூட்டை மட்டுமே கட்டும். ஆனால் மனிதன் முன்கூட்டியே சிந்திக்கும் திறன் பெற்றிருப்பதால்தான் அவனால் நீருக்குள்ளும் வீடு கட்ட முடிகிறது.
கருத்து என்பது மனித மூளையின் தன்மை.
கருத்தின் உறுப்பு மனித முளை ஆகும்.
வெளிப்படுத்தாத வரை ஒருவரின் கருத்தை யாராலும் அறிய முடியாது. கருத்து உருவாகும் உறுப்பு மூளை.

அந்த வகையில் கருத்துக்கு மனிதனின் வயது மட்டுமே
ஆனால்
பொருள்களுக்கோ ஆதியும் இல்லை அந்தமும் இல்லை.
எனவே பொருளே முதல் என்பது இதன் மூலம் தெளிவு.
அறிவியல் வளராத காலத்தில் நம்மை சுற்றியுள்ள இந்த பருப்பொருள்கள் (பொருளின் வடிவங்கள்) ஆதியும் அந்தமும் இல்லை என்று சொன்னால் யாரும் நம்பவில்லை, எனவே இவை அனைத்தையும் ஒருவரின் கையில் கொடுத்து அவர்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்றனர்.
அந்த ஒருவர் தான் கடவுள்.
அந்த வகையில் கடவுள் வெறும் கருத்துதான்.
ஏனெனில் கடவுளுக்கு சொல்லப்படும் விளக்கம் என்ன?
அவர் புலன்களால் உணரமுடியாதவ்ர்.
எனவே கடவுள் வெறும் கருத்துதான்.
கடவுள் மனிதனால் படைக்கப்பட்டதே ஒழிய மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன் அல்ல.

இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?

-தொடரும்

3 comments:

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

இப்பணி தொடர வாழ்த்துக்கள் ...

Unknown said...

Nandru

Unknown said...

Arputhamaana thodakkam